Posts

மாய வருத்தத்தின் மந்திர முடிச்சு (சிறுகதை)

  தூரத்தில், விரிவானின் எல்லையில் விழுந்த புள்ளியில் ஒரு கருமை திகைந்தெழுந்து திணிவது கண்டு, மாளிகையின் மேல்மாடத்தில் நின்றிருந்த அல்மினாவின் உள்ளத்தில் குதூகலத்தின் அரும்புகள் சட்டெனத் தெறித்தன. ‘கமால் அப்துல்லாவா?’ இல்லை, அவனில்லை; அவனாகயிருக்காது; அவன் வரமாட்டான்; இத்தனையாண்டுகள் வராதிருப்பவன் இனியும் வரப்போவதில்லை; வருவது எதிர்வுகூறப்பட்ட மணற்புயலாய்த்தான் இருக்கும்; ஆயினும் அவனாகயிருந்தால் நல்லதுதான்; கண்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தமாதிரி ஆகுமென அவள் எண்ணினாள். சுற்றிலும் பாலை விரிந்த அம் மணல் வெளியில் லிபியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளை அண்டியதாய், ஆயினும் சுலபமான அடைதல் சாத்தியமின்றியும், எல்லை நிர்ணயமின்றியும், பசுமைகொண்ட சில நிலத் தீவுகள் இருந்துகொண்டுதான் இன்னும் இருக்கச்செய்தன. இத்தாலியரும், இஸ்பானியரும், பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் ஆபிரிக்க கண்டத்தைக் குறிவைத்தபோது, சில நல்லதுகள் நடந்தன. சூயஸ் கால்வாய் அவற்றிலொன்று. நடுவில் கிடந்த நிலத்தை தோண்டி கடலாக்கி மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைத்து அய்ரோப்பாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமான சுருக்க வழி அண்மையில்த

முப்பது ஆண்டுகள் பிந்தி பெய்த மழை

  கூடத்துள் பாய் விரித்துப் படுத்திருந்த அல்லிராணியின் ஜன்னலூடு பாய்ந்த பார்வையில் வௌி கருமை திணிந்து கிடந்தது தெரிந்தது. ஒரு வெள்ளிகூட வானில் பூத்ததாய்க் காணக்கிடக்கவில்லை. முதல்நாள் தன் வீட்டு முற்றத்திலிருந்து அவள் பார்க்க நேர்ந்த இரவு, அதன் பாதியளவும் இருண்மை கொண்டிருக்கவில்லை என்பது ஞாபகமாக அவளுக்கு அதிசயம் பிறந்தது. மாலையில்கூட பார்த்தாளே, அம் மாதிரி இருண்ட பாதிக் கோளமாகும் முன் அறிகுறியேதும் அப்போதும் கண்டிருக்கவில்லைத்தான். பதினொரு மணிபோல் சாப்பிட்டுவிட்டு சிவம் தூங்கச் சென்ற அறையுள்ளிருந்து வெளிமூச்சில் எழுந்த மெல்லிய கீரொலி கேட்டது. தூங்கியிருப்பாரென எண்ணிக்கொண்டாள். மாலையில் விமானநிலையத்திலிருந்து வானில் வந்திறங்கியது கண்டபோதே கொஞ்சம் வயதாகிவிட்டார்போலவே சிவம் அவளுக்குத் தென்பட்டார். ஆயினும் தளர்ந்துபோனாரென்று சொல்லமுடியாதபடியே உடல்வாகு இருந்தது. கடைசியாக அவள் பார்த்திருந்தமாதிரி அல்லவென்றாலும், அதே சிரிப்பும் பேச்சும் கண்வெட்டுமாகத்தான் சிவம் இருந்தார். டென்மார்க்கிலிருந்து அவரின் மகள் கலாவதிதான், ‘வயது போயிட்டுதெல்லோ, ரண்டு மாசத்துக்கு முன்னால இஞ்ச பாத் றூமில சறுக்

தேவிபாரதியின் ‘நொய்யல்’: மதிப்புரை

Image
  தேவிபாரதியின் ‘நொய்யல்’: ‘மொழியின் வேட்டைக் காடு’ -தேவகாந்தன்-   தன்னறம் அமைப்பின் வெளியீடாக ஓகஸ்ற் 2022இல் வெளிவந்திருக்கிறது தேவிபாரதியின் ‘நொய்யல்’ புதினம். ‘நிழலின் தனிமை’ (டிச. 2011), ‘நட்ராஜ் மகராஜ்’ (மே 2016), ‘நீர் வழிப்படூஉம்’ (2020) ஆகியவற்றின் பின் வந்த அவரின் நான்காவது   புதினமான இது, இடையிடையிட்ட புகைப்படங்களையும், நான்கு பகுதிகளையும், 630 பக்கங்களையும் கொண்ட பெரும் படைப்பு. ‘கரைகொள்ளாமல் பொங்கிச் சீறும் நொய்யலின் ஹோவென்ற பேரிரைச்சலைத் தவிர வேறு ஓசைகளில்லை’ என பக்கம் 31இல் தொடங்கி, ‘இமைக்காத விழிகளுள் சடலம் உறைந்துநின்றது. அப்படியே கைகளில் அவளை ஏந்தினான். தழுவினான். பிறகு அது மூழ்கத் தொடங்கியது. அடியாழம்வரை சென்றது. பிறகு என்றென்றைக்குமாக இல்லாமல் போனது’ என பக்கம் 630இல் புதினம் முடிவடைகிறது. இவ்வாறாமைந்த இப் பிரதி, ஏறக்குறைய இருபத்தெட்டு ஆண்டுகளாய் படைப்பாளியின் மனத்துள் கிடந்து தன்னை உருவாக்கியபடியும், சிறிது சிறிதாய் வடிவங்கொண்டு எழுத்தில் வந்தபடியுமிருந்த பிரதியென அறியமுடிகிறது. இக்காலத்தில் தனக்கான ஒரு நடையை உள்வாங்கி, ஆயிரம் பக்கங்களிலிருந்து அறுநூறு

சாம்பரில் திரண்ட சொற்கள் 16

Image
  இலையுதிர் காலத்தின் ஒரு விசேஷம், சட்சட்டென சுழற் காற்றுகள் கிளம்பி பிரபஞ்சத்தை தூசு மண்டலமாக்குவது. எங்கிருந்தோ விசையுடன் கிளம்பிவரும் காற்று, ஏதோவொரு புள்ளியில் திடம்போல் உருப்பெற்று நின்று சுழற்பெடுக்கும். அந்நேரம் புளுதியும் தும்பும் காய்ந்த இலை சருகுகளும் அதன் வலிய கரங்களால் அள்ளுப்பட்டு மரங்களின் உயரங்கள் கடந்தும் நெடுக்கும். வெளியே நடக்கும் சூறையின் அட்டகாசத்தை பின்முற்றத்தில் இருந்த சுந்தரம் கண்டுகொண்டிருந்தார். இடவசதியாலும், அயல்மனிதர்களாலும் அப்போது குடியிருக்கும் அந்த வாடகை மனை, சொந்த மனைபோல் ஆகியிருந்தது சுந்தரம் சிவயோகமலர் இருவருக்கும். ஆரம்பத்தில் நிலக்கீழ் வீட்டின் குடியிருப்பில் சிவயோகமலருக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை. அவ்வப்போது தன்னதிருப்தியின் புறுபுறுத்தல்களை அவர் செய்துகொண்டேயிருந்தார். அப்போதெல்லாம் தன் மெலிந்த குரலில், ‘பேஸ்மென்ரில் குடியிருக்கிறது பெரிய பாக்கியம்’ என தனக்கேபோல் வகுப்பெடுக்க ஆரம்பிப்பார் சுந்தரம். ‘அது    மரங்களின்ர வேருக்குச் சமாந்திரமாய் இருக்கிது; அவையின்ர கதையள் பேச்சுகள் சுவரில மோதேக்க, எங்கட உட்புலனில அதெல்லாம் எதிரொக்கிது. இ

சாம்பரில் திரண்ட சொற்கள் 15

Image
  வெய்யில் கொழுத்திய பதினொரு மணிப் பொழுதில் வீடு வந்துசேர்ந்தனர். சாய்வான பின்முற்றப் பாதையால் கீழிறங்கியிருந்தார் சிவயோகமலர். கூட வந்திருந்த செல்லத்தம்பு, சாந்தரூபிணி, சுந்தரமென யாரின் உதவியுமின்றி, வீட்டின் முன்புற கார் நிறுத்தத்கிலிருந்து தன்னறைவரையான சுமார் நூறு அடி தூரத்தை, நடந்து கடந்ததிலான ஒரு திருப்தி அவர் முகத்தில் ஜோதித்துக்கொண்டு இருந்தது. அதன் பிரதிபலிப்பு மற்றவர் முகங்களிலும் காணக் கிடந்தது. மூன்று நாட்களுக்கு முந்தி இருள் சூழும் ஒருபொழுதில் அதே வழியில் தான் ஸ்ட்றெச்சரில் வைத்துக் காவிக்கொண்டு செல்லப்பட்டதையெண்ண அத் திருப்தியின் அலைகள் மகிழ்ச்சியாய்ப் பரிணமிக்கத் துவங்கின. உண்மையில் இன்னும் தன்னால் சிறிதுதூரம் யாரின் கைத் தாங்கலுமின்றி கைத்தடியுடன்மட்டும் நடந்துசெல்ல முடியும்போல் சிவயோகமலர்   உணர்ந்துகொண்டிருந்தார். முதல்நாள் மதியமளவில் மகேந்திரசிவம் அவரைப் பார்க்க ஒட்டாவாவிலிருந்து வந்;திருந்தான். தனியாகத்தான். ‘அங்கயிருந்து காரில தனியவே வந்தனீ?’ என்ற தாயின் கேள்வியில், தன் மனைவி பிள்ளைகளை அழைத்து க்வரவில்லையேயென்ற ஆதங்கம் பொதிந்திருந்தது அவன் கண்டான். அதை   உணர்ந்த